1) சீரைத் தேடின் ஏரைத்தேடு., புகழோடு வாழ விரும்பினால் விவசாயம் செய்., 2) அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்., உழவுத் தொழிலின் நுட்பம்., 3) ஆடிப்பட்டம் தேடி விதை., ஆடி மாதத்தில் விதைப்பது சரியான காலகட்டம்., 4) பருவத்தே பயிர் செய்., உரிய காலத்தில் பயிர்களைப் பயரிடு., 5) காய்ந்த விதைக்கு மதிப்பில்லை., நல்ல தரமான விதைகளை தெரிவு செய்து விதைக்க வேண்டும்., 6) அடர விதைத்து சிதறப் பிடுங்க வேண்டும்., வேளாண்மை நுணுக்கம்., 7) வானம் பார்த்த பூமி., நீர் வளம் குறைந்த பூமியில் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்தல்., 8) களையை முளையிலே கிள்ளு., பயிர்களைப் பாதுகாக்க களைகளை வேருடன் பிடுங்கு., 9) களை மிடுக்காக பயிர் காற்பயிர்., வேண்டாத களை பயிர்களுக்கு தீங்கு விளைவித்து விளைச்சலைக் குறைக்கும்., 10) ஏரினும் நன்று எருவிடல்., உரிய பருவத்தில் உரம் இடுதல் நன்று., 11) உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை., உழவுத் தொழிலுக்கு நிகராக எதுவுமில்லை., 12) கேட்காத கடனும் பார்க்காத பயிரும் பாழ்., நம்மையன்றி நம் பொருளுக்கு பாதுகாப்பானவர் இல்லை, 13) அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடா., முக்கியமானவர் இன்றி எக்கருமமும் நடைமபெறமாட்டாது., 14) அலை மோதும் போதே தலை முழுகு., சந்தர்ப்பங்களைத் தவற விடக் கூடாது., 15) ஆறின கஞ்சி பழங்கஞ்சி., காலத்தின் முக்கியத்துவம்., 16) உப்பிட்வரை உள்ளளவும் நியைன., நன்றி மறவேல்.

பழமொழிகள் தரம் 4 - 2

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?